Posts

Showing posts from July, 2015

அம்மாவை பற்றி ஒருசில வார்த்தைகள் ....

இந்த பக்கங்கள் என் அம்மாவுக்காக எழுதபடுபவை. என் அம்மா......அவர்களை பற்றி நான் சொல்லிக்கொண்டே போகலாம்....அவர்கள் திறமைகள் .. குணம்...இப்படி ....எல்லா அம்மக்களும் அவரவர்களுக்கு உயர்ந்தவர் தான் ஆனா...என் அம்மா நான் பார்த்த வரையில் மிக வித்யசாமனவர்....இதை நான் மட்டுமல்ல அவரை அறிந்த அனைவரும் கூறுவது . அம்மா படுத்த படுகையாக இருந்தபோது நான் பார்த்து வருந்துகிறேன் என்று என் அம்மா அப்பா இருவரும் என்னை வற்புறுத்தி மல்டிமீடியா கற்றுக்கொள்ள அனுப்பிவைத்தார்கள். அப்போது அம்மா என் கவிதை, விடுகதை இவற்றை பத்திரிகைகளில் வெளியிட முடியவில்லை இப்போது இதை கற்றுக்கொண்டு அதற்காக ஒரு வெப்சைட் உருவாக்கு என்று சொன்னார்கள். ஆனால் அதை இன்று வரை நான் செய்யவில்லை.கிட்டதட்ட ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டன...வெப்சைட் உருவாக்க பணம் தேவை ....அதனால் blog ஆவது எழுதலாமே என்று அம்மாவின் ஒரேஒரு டைரியயை மட்டும் எடுத்து வந்து எழுதுகிறேன். அவர் எழுதியது பெரும்பாலும் குழந்தைகளுக்காக தான். அவை இன்றி கடவுள் மேல் பல பாடல்கள். இதில் எழுதபட்டிருக்கும் அனைத்து பாடல்/கவிதைகள், விடுகதை, சொல்விளையாட்டு..அனைத்துக்கும் என் அம்மாவே சொந்தகாரி.தய