Posts

Showing posts from August, 2009

எந்தன் வியப்பு!!

பச்சைக் கிளிக்கு சிவந்த மூக்கை செதுக்கி வைத்தவர் யாரோ? பாடும் குயிலுக்கு இனிய குரலை கொடுத்து வைத்தவர் யாரோ? அழகிய மானுக்கு புள்ளிகள் வைத்து அழகு செய்தவர் யாரோ? ஆடும் மயிலுக்கு அழகாய் தொகையை பின்னி வைத்தவர் யாரோ? மலைகளில் மகிழ்வுடன் மரங்களை கொண்டு இறக்கி வைத்தவர் யாரோ? மாண்புடன் தரைகளில் பச்சை புல்லை பரப்பி வைத்தவர் யாரோ? கனிவுடன் சொற்களில் இனிமையை நமக்கு கலந்து வைத்தவர் யாரோ? களிப்புடன் உண்ணும் உணவின் சுவையை கூட்டி வைத்தவர் யாரோ? கயல் விழிதனிலே ஒளியினை வைத்து காண வைத்தவர் யாரோ? தாயேனும் உணர்வினில் அன்பினைக் கொட்டி தேக்கி வைத்தவர் யாரோ? தானாய் கனிந்திடும் கனியினில் தனியொரு சுவையினைக் கலந்து வைத்தவர் யாரோ? கருவினில் சேயையும் கல்லினுள் தேரையும் கருத்துடன் வளர்ப்பவர் யாரோ? வீணையில் நாதமும்,மலரினில் வாசமும் வழங்கிய வள்ளல் யாரோ? இயற்கை அழகை வாரி வழங்கி இன்பம் தந்தவன் எவனோ இன்னும் தருவான் என்றும் தருவான் ஏற்றி அவன் தாள் பணிவோம்.

வேலன்

துள்ளி வருகுது வேலென்று சொல்லி என் துன்பங்கள் ஓடுதடா!- எந்தன் துன்பங்கள் ஓடுதடா!-அந்த வள்ளிக் கணவனின் பேர் சொல்லச் சொல்ல வாயெல்லாம் இனிக்குதடா !-எந்தன் வாயெல்லாம் இனிக்குதடா! கள்ளத்தனமாக ஐம்பெரும் பூதங்கள் கட்டியிழுக்குதடா !-என்னை கட்டியிழுக்குத்டா!-அந்த வள்ளிமலை நாதன் வேலணை எண்ணிட எட்டிப் பறக்குதடா!-பூதங்கள் எட்டிப் பறக்குதடா! கொள்ளை கொள்ளையாக குமாரனின் பாடல்கள் கொட்டிக் கிடக்குதடா !-உலகில் கொட்டிக் கிடக்குதடா!-அதை அள்ளியெடுத்து ஆனந்தமாய் பாடிட உள்ளம் துடிக்குதடா!-எந்தன் உள்ளம் துடிக்குதடா ! தங்க மயிலேறி வந்திடும் கந்தனைக் காணத் துடிக்குதடா !- கண்கள் காணத் துடிக்குதடா!- அந்த அங்கயற் கன்னி அழகு மைந்தனின் அருளினை நாடுதடா !-நெஞ்சம் அருளினை நாடுதடா! வள்ளலார் பாடலில் வள்ளல் குமாரனின் வாய்மொழி கண்டேனடா!-கந்தன் வாய்மொழி கண்டேனடா!-அந்த அல்லலகற்றிடும் ஆனந்தப் பாவினில் உள்ளம் குளிர்ந்தேனடா !-எந்தன் உள்ளம் குளிர்ந்தேனடா!

முருகன்

முத்துக் குமரனடி பற்றிட வேண்டுவோர்க்கு முன்வினை தீருமடி-சகியே! முக்தியும் கூடுமடி! பக்தியுடனந்த பன்னிருகையனை பாடி துதிப்போர்க்கு -சகியே! பாவங்கள் தீருமடி! எட்டுக் குடிகொண்ட ஏறு மயிலோனை எண்ணித் துதிபோர்க்கு -சகியே! ஏழ் பிறப்பில்லையடி! குட்டுண்ட பிரம்மனும் குருவெனக் கொண்டவனை கும்பிட்டு வருவோர்க்கு -சகியே! குலவினை தீருமடி-சகியே! குருவருள் கிட்டுமடி! இந்திரன் மருகனை தென் பரங்குன்றனை இப்புவிதனில் நினைப்போர்க்கு -சகியே! இன்பங்கள் சேரும்மடி ! தணியாத சினமாற்றும் தணிகை மலையானை தரணியில் துதிப்போர்க்கு -சகியே! தடையேதும் வாராதடி! செந்தில் குமரனை சீர்மிகுவேலனை சிந்தையில் வைப்போர்க்கு-சகியே! சஞ்சலம் தீருமடி! ஆவினன் குடிகொண்ட அருள்மிகு பாலனின் அடிமலர் துதிப்போர்க்கு -சகியே! ஆனந்தம் பெருகு மடி ! அரணுக்கு குருவாகி அருமறை பொருள் சொன்ன அருள்திரு வேலணை (வெகரனை?)-சகியே! அண்டினோர் கெடுவதில்லை ! குன்று தோறாடல் கொண்ட குறமகள் நாதனை கும்பிட அருள்தருவான் -சகியே! குவலயம் மீதினிலே! கணிகொண்ட பழமுதிர் சோலை முருகனின் பதமலர் நினைபோர்க்கு-சகியே ! பழவினை தீருமடி! என்றென்று இளமையாய் எழில்கொண்ட சொலைமலையிலே இருப்பவன் முருக